Friday, January 27, 2012

தூறல்கள் : மேகம் : 2







என் தனிமை இரவுகள்
நிதமும் என்னை
தேடிக்கொண்டுதான் இருக்கின்றன,
உன் நினைவுகளில் . . . !



மழை முடிந்து
வெகு நேரமாகியும்
கரையவில்லை
கருப்பு வானவில்,
என்னவளின் புருவம்......




என் காயங்களுக்காக
நீ மௌனங்களில்
கண்ணீர் விட்டதை,
காட்டிக் கொடுத்தது,
உன் கைக்குட்டை........




காலம் கடந்த பின்னும்
நடைபெறும் ,
உன் மெல்லிய நலம் விசாரிப்புகளில்,
ஏனோ
உயிர்பெற்றுவிடுகிறது
என் அசட்டுக் காதல் .....





 நீ எனக்கு வாங்கி கொடுத்த
வெற்றுத் தாள்கள் அனைத்திலும்
கவிதைகள் நிரம்பி இருந்தன...........!!!



அவள் விட்டுச்சென்ற கைக்குட்டைக்கு
உயிர் கொடுக்க தூக்கிச்சென்றன,
வண்ணத்துப்பூச்சிகள்.


என்னைவிட,
உயிரற்ற பொருட்களுடன் தான்
அதிக நேரம் செலவிடுகிறாய்
உயிரற்ற கணினிக்கு கூட
உன் தொடுதல் கிடைத்துவிடுகிறது
ஒற்றைப் பூ காதலுடன் நான்.
 பரிதாபப்பட்டு,
இனிமேலும் எனக்காக
உன்னை மாற்றிக்கொள்ள வேண்டாம்
பெண்ணே .....
தனியாகவே உயிர் வாழ கற்றுக்கொண்டது
என் இதயம்.......!!! ♥






யாராவது கொண்டு வாருங்கள் ,
அன்று எனக்காக
மழையில் கரைந்த,
என்னவளின்
ஒரு துளிக் கண்ணீரை !!!


ஒரு நொடி சாரல் மழையாய்
கடந்து சென்றுவிட்டாய் ,
என்னையும் ,
என் வாழ்க்கையையும்.......!!!


சுடும் வெயிலில் நீ என்னை
கடந்து சென்ற போது ,
சாரல் மழையாய் என்னை
நனைத்து சென்றது
உன் நிழல் . . . !!!



- கவிதை நிலா ஜே  -
http://www.facebook.com/kavithainila