Sunday, July 11, 2010

நிலாச்சாரல்.... மேகம் : 1


அவள் தோளில் அமர்ந்து விட்ட மகிழ்ச்சியில்,
இன்னும் உயரே பறக்கத் துவங்கியது,
சிட்டுக்குருவி !!!



அவளை விட்டு பிரிந்துவிடப்போகிறோம் என்ற பயத்தினால்,
வேக வேகமாய் அவளைப் பின் தொடர்கிறது,
என்னவளின் நிழல் ..............!!!



கனவிலும் நான் நினைக்கவில்லை,
இவ்வளவு எளிதாக என் இதயத்தை
நீ கொண்டுசெல்வாய் என்று !!!



நாளை உன்னைக் காணப்போகும்
மகிழ்ச்சியில்,
இரவெல்லாம் இமை மூட மறந்தன
என் விழிகள் !!!



என் பொய்களில் மறைந்திருக்கும்
உண்மையை கூட
எப்படியோ
கண்டுபிடித்துவிடுகிறது
உன் காதல்....................!!!



யாரும் அருகிலில்லாத
மலையுச்சியின்
...தனிமை இரவில்,
எனக்கான உன் காதலை
இமைக்க மறந்து
இரசித்துக்கொண்டிருந்தோம்,
நானும், நிலாவும் !!! ........



என்னுடன் பேசி முடித்து
நீ கிளம்பும்போதெல்லாம்,
என் அனுமதியின்றி
உன்னுடன் செல்ல துடிக்கும்,
...என் இதயம் .



 உன்னுடன் பேசி முடித்து,
விடைபெற மனமில்லாமல்,
முடிவற்று நீள்கிறது
சாலைகளும், வார்த்தைகளும்...........



எனக்காக நீ காத்திருக்கும்
ஒவ்வொரு பொழுதிலும்,
உன்னையறியாமல்
துளிர் விட்டுக்கொண்டிருக்கிறது,
எனக்கான காதல்...........!!!


என் பெயர் சொல்லி
நீ அழைக்கும்போதெல்லாம்
எட்டி பார்க்கும்
என் இதயம்........