Wednesday, May 5, 2010

நானாகிய நான்......



   
















             ...என் கண்களை உற்றுப்பாருங்கள் ,
என்னைக் கடந்து சென்ற
என்னவளின் பிம்பத்தைக் கூட
பத்திரமாய் சேகரித்து வைத்திருக்கின்றன
கருவிழிகள்.. !!!  



....அவளின் நிழல் பதிய,
வரம் கேட்டு
காத்திருக்கின்றன
என்னிரு விழிகள்.......

                                    ~  ஜெய் ♥

நிலாச்சாரல்....



நேற்றிரவு
நீ செல்லமாய் தீண்டிவிட்டுப் போன
என் கவிதைகள்,
இன்றுக் காலை
பூக்க துவங்கியிருந்தன.......!!!

````````````````````````````````````````````````````````

விழி மூடினாலும்,
விடியும் வரை நீ காத்திருக்க சொன்னால்,
உறங்க மறுக்கும் என் மனம் ........!!!

````````````````````````````````````````````````````````

அடிக்கடி வெட்கப்படாதே,
கரைகிறது, கவிதை நிலா.............

````````````````````````````````````````````````````````

உன்னைக் காணாமல் போன ஒரு நொடியில்,
தொலைந்ததே போனது
என் வாழ்நாள்...........!!!

````````````````````````````````````````````````````````

நிலா இல்லாத வானத்தைக் காட்டி
ஏதோ சொல்லிவிட்டுப் போனாய்,
புரியவில்லை.....!!!
நீ சொல்லிக்கொண்டிருந்தபோது
நானேன்னவோ பார்த்துக்கொண்டிருந்தது,
வெண்ணிலவையே வெட்கமுறச் செய்த
உன் கயல் விழிகளையும்,
சிவந்த கன்னங்களையும் தான் !!!

````````````````````````````````````````````````````````

எப்பொழுதும் என்னைப் பற்றியே
கவிதை எழுதிக்கொண்டிருக்கிறாயே,
ஒரு நாளாவது நான் பதிலுக்கு கடிதம் அளித்திருக்கிறேனா ?
அவள் கேள்விகள் நூறு கேட்டாலும்,
விடையளிக்காது ,
காரணம் தெரிந்த என் மனம் .........
' கவிதைகள் கவிதை எழுதுவதில்லை !!!

````````````````````````````````````````````````````````

காலம் பார்க்காமல்
கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் ,
காரணம் கேட்காமல்
கிழித்துப் போட்டுக்கொண்டிருக்கிறாள் அவள்......
சிதறிய காகிதங்களில்,
சேர்ந்திடும் என் காதல்.....!!!

````````````````````````````````````````````````````````

உன் ஆடையின் நுனி
உரசிச்சென்ற அந்நொடியில்,
வலிகளற்று,
வேரோடு சாய்ந்தது என் இதயம்.......!!!

````````````````````````````````````````````````````````

அவள் புகைப்படத்தை கேட்டு
வெகு நேரம் காத்திருந்தேன்,
மௌனங்களில் மட்டுமே பேசினாள்.....
சரிதான்.....
தேவதைகள் ஏனோ சில நேரங்களில் வரமளிப்பதில்லை !!!!

````````````````````````````````````````````````````````

என்னைக் கண்டும் காணாதது போல்
செவ்வனே நடந்துக்கொண்டிருந்தது
அவள் கண்கள் நடத்திய
காதல் நாடகம்...

````````````````````````````````````````````````````````

கவிதைகளை எழுதி முடித்துவிட்டேன்,
ஆனாலும் அவள் பெயரை விட்டு
இடம்பெயர மறுக்கிறது
என் பேனா.....!!!

````````````````````````````````````````````````````````

என்ன விலை சொல்லிக் கேட்பேன் ?,
உலகமே மறந்து போகும்,
உன்னுடைய அந்த தெற்றுப்பல் சிரிப்பை !!!

````````````````````````````````````````````````````````

பெண்ணென்ற ஆணவத்தை
அவளிடம் கண்ட போதும்
கோபம் ஏதும் வரவில்லை,
இதயம் நிறைந்தது............
அவளைப் பார்த்து இளித்த இளைஞனுக்கு
அறை விழுந்தபோது................

````````````````````````````````````````````````````````

 ....என்னவளைத் தேடிப் போன என் இதயம்
தொலைந்துப் போனதாக கேள்வி !!!
தடங்கலுக்கு வருந்துகிறோம்
இப்படிக்கு,
இதய துடிப்புகள் !!! ♥ .. ஜெய் & ப்ராங்க்ளின் ...

````````````````````````````````````````````````````````

அவள் தொட்டுச்சென்ற இலைகளில் கூட,
மகிழ்ச்சியாய் அமர்ந்து தேன் தேடுகிறது,
வண்ணத்துப்பூச்சி !!! ஜெய் ♥

````````````````````````````````````````````````````````

அவள் தோளில் அமர்ந்து விட்ட மகிழ்ச்சியில்,
இன்னும் உயரே பறக்கத் துவங்கியது,
சிட்டுக்குருவி !!!

````````````````````````````````````````````````````````

 அவள் கைப்பட்ட நொடியில்
உயிர்பெற்றெழுந்தது,
வரம் வாங்கி வந்த மடிக்கணினி........

````````````````````````````````````````````````````````

இரண்டு நிமிடம் ... ஒரு நிமிடம் ...
என எனக்காக இருக்கும் மீதி நிமிடங்களை
எண்ணிக்கொண்டிருக்கிறாள்,
வெகு நேரமாகியும் குறையவில்லை ,
நிமிடங்களும், வலிகளும் !!!! ...ஜெய் ♥

````````````````````````````````````````````````````````

 வெகு நேரமாய் காத்திருந்தேன்,
அவள் வரவில்லை,
விழி நீரின் மழையால், பூத்தது ' வானவில் ' ..........

````````````````````````````````````````````````````````

நீ பார்க்க துவங்கியவுடனே,
பூக்க துவங்கிவிட்டன
இத்தனை நாளாய் உன்னைத் தேடிக்கொண்டிருந்த
என் கவிதைகள்...............

````````````````````````````````````````````````````````

அவள் என்னைவிட்டு நீங்கிய மறு நொடியிலிருந்து,
சில நிமிட துடிப்புகளை குறைத்துக்கொண்டது,
' இதயம் ' ......!!!

````````````````````````````````````````````````````````

ஏன் இன்னும் உன்னைக் காணவில்லை ??
என்ற கவலையிலேயே
நிமிடங்களை கடக்க
வேக வேகமாக முயற்சி செய்கிறது,
கடிகார முட்கள் .....

````````````````````````````````````````````````````````

அவளை விட்டு பிரிந்துவிடப்போகிறோம்
என்ற பயத்தினால்,
வேக வேகமாய் அவளைப் பின் தொடர்கிறது,
என்னவளின் நிழல் ..............!!!

````````````````````````````````````````````````````````

எவ்வளவுதான் காயம்பட்டாலும்,
உன் ' அச்சச்சோ ' வில் கரைந்துவிடுகிறது
என் எல்லா வலிகளும் !!!

````````````````````````````````````````````````````````

நீயின்றி எப்படி நான் தனித்திருப்பேன் ,
நாளை நீ வரும் வரை ??? ...ஜெய் ♥

````````````````````````````````````````````````````````

கனவிலும் நான் நினைக்கவில்லை,
இவ்வளவு எளிதாக
என் இதயத்தை நீ கொண்டுசெல்வாய் என்று !!!

````````````````````````````````````````````````````````

அடிக்கடி இருட்டுக்குள் சென்று விடுகிறாய்..........
எப்படியோ உன் நிழலில்
நான் ஒளிந்திருப்பதை கண்டுகொண்டு !!!

````````````````````````````````````````````````````````

நீ கோபப்பட துவங்கும்போதேல்லாம்,
வியர்க்கத் துவங்கிவிடுகிறது,
என் இதயம் ........

`````````````````````````````````````````````````````````

யாராவது கொண்டு வாருங்கள் ,
அன்று எனக்காக
மழையில் கரைந்த,
என்னவளின்
ஒரு துளிக் கண்ணீரை !!!

`````````````````````````````````````````````````````````

நாளை உன்னைக் காணப்போகும்
மகிழ்ச்சியில்,
இரவெல்லாம் இமை மூட மறந்தன
என் விழிகள் !!!

```````````````````````````````````````````````````````

உன் தீண்டல் வேண்டிக் காத்திருக்கின்றன, 

என் கவிதைகள்.........

~ ' கவிதை நிலா ' ஜெய் <3  ~