என்றாவது
உன் புகைப்படங்களை புரட்டும் போது,
என் இதயத்தில்
அகப்பட்டு கொண்டே இருக்கின்றன,
என்னவளின் நினைவுகள் ...
தெரியாமல் உன் விரல்கள்
என்னைத் தொட்டுவிடும்போதேல்லாம்,
சட்டென்று நனைந்துவிடுகிறேன்
பனி மழையில்........
நேற்றிரவு கடற்கரைக்கு வந்தாயா ???
இப்பவும்
சில்லிடுகிறது காற்று //
தென்றலாய் மாறி ....!!!
நான் காணும் கனவுகள்
நிஜங்களாவதில்லை என்றாலும்,
உன்னைக் கனவில் காண்பதை
மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை
நான்......!!!
ஒரு புன்னகையேனும்
தவறவிடு பெண்ணே,
வார்த்தைகளிழந்த
கவிஞனாய் நான்....!!! ஜெய் ♥