அவளே கேள்வி, அவளே பதில்.....

வெகு நேரம் யோசித்து,
இறுதியாக உன்னை ஒரு கேள்வி கேட்டேன்.....
' உண்மையாலுமா என்னை உனக்கு பிடிக்கவில்லை ? '.
சற்றே இடைவெளி இன்றி பதிலளித்தாய்,
அன்று தான் எனக்குத் தெரியும்,
உனக்கு இவ்வளவு வேகமாய்
முடிவெடுக்க தெரியும் என்று .........!!!


Really u gone mad - என்னவள் சொன்னாள்,

' Stupid ' - என்னவளின் தோழி சொன்னாள்

loose - என்னவளின் தங்கை சொன்னாள்

- ஆனால் இறுதிவரை,
நான் அவளால்தான் பைத்தியமானேன்
என்று யாரும் சொல்லவேயில்லை !!!





நான் அனுமதிக்காவிட்டாலும்,
உனக்காக காத்திருக்கும்
தனிமை சூழும் தருணங்களில்,
ஏனோ என்னையறியாமல்
விண்மீன்களை
எண்ணத் தொடங்கிவிடுகிறது
மனது....!!!

மழைப் போல உன் காதல்,
பொழிகின்றது நான் உணர்வேன்.......
இக்குடையும் தேவையா ???

வான் துளி தேடும்
பூமியைப் போல,
உன் சாரல் வேண்டி
நானும் காத்திருக்கின்றேன்,
என் வாசல் தேடி வருவாயா ???...

பெரு மழையாய் நீ......
குடை கொண்டு வராத
பொழுதுகளில்
இப்படிதான் விளையாடுவாய்.
உன்னைத் தவிர்த்து... See more
இடம் தேடி நான் ஒதுங்கினாலும்,
முழுதும் நனையாத
என் மேல்,
துளித் துளியாய் உன் நினைவுகள்.......

இருள் சூழ்ந்த
என் தனிமை நேரங்களிலும்,
துணையாய்
என்னைப்
பின்தொடர்கின்றது,
மழைத்துளியாய்...
உன் காதல்........




நீயின்றி ஓர் அணுவும் அசையாது,
உன் துணையின்றி,
என் நாட்கள் நகராது.........




இது நீயா ????
பூ வாசம் வீசும் பொழுதுகளில்,
என் சுவாசம் நிரம்பி,
உன் நினைவுகளில் தொலைந்து போன
என்னை
மீட்டெடுத்த
என் தனிமையின் தேவதை......................!!!