Wednesday, May 5, 2010

நிலாச்சாரல்....



நேற்றிரவு
நீ செல்லமாய் தீண்டிவிட்டுப் போன
என் கவிதைகள்,
இன்றுக் காலை
பூக்க துவங்கியிருந்தன.......!!!

````````````````````````````````````````````````````````

விழி மூடினாலும்,
விடியும் வரை நீ காத்திருக்க சொன்னால்,
உறங்க மறுக்கும் என் மனம் ........!!!

````````````````````````````````````````````````````````

அடிக்கடி வெட்கப்படாதே,
கரைகிறது, கவிதை நிலா.............

````````````````````````````````````````````````````````

உன்னைக் காணாமல் போன ஒரு நொடியில்,
தொலைந்ததே போனது
என் வாழ்நாள்...........!!!

````````````````````````````````````````````````````````

நிலா இல்லாத வானத்தைக் காட்டி
ஏதோ சொல்லிவிட்டுப் போனாய்,
புரியவில்லை.....!!!
நீ சொல்லிக்கொண்டிருந்தபோது
நானேன்னவோ பார்த்துக்கொண்டிருந்தது,
வெண்ணிலவையே வெட்கமுறச் செய்த
உன் கயல் விழிகளையும்,
சிவந்த கன்னங்களையும் தான் !!!

````````````````````````````````````````````````````````

எப்பொழுதும் என்னைப் பற்றியே
கவிதை எழுதிக்கொண்டிருக்கிறாயே,
ஒரு நாளாவது நான் பதிலுக்கு கடிதம் அளித்திருக்கிறேனா ?
அவள் கேள்விகள் நூறு கேட்டாலும்,
விடையளிக்காது ,
காரணம் தெரிந்த என் மனம் .........
' கவிதைகள் கவிதை எழுதுவதில்லை !!!

````````````````````````````````````````````````````````

காலம் பார்க்காமல்
கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் ,
காரணம் கேட்காமல்
கிழித்துப் போட்டுக்கொண்டிருக்கிறாள் அவள்......
சிதறிய காகிதங்களில்,
சேர்ந்திடும் என் காதல்.....!!!

````````````````````````````````````````````````````````

உன் ஆடையின் நுனி
உரசிச்சென்ற அந்நொடியில்,
வலிகளற்று,
வேரோடு சாய்ந்தது என் இதயம்.......!!!

````````````````````````````````````````````````````````

அவள் புகைப்படத்தை கேட்டு
வெகு நேரம் காத்திருந்தேன்,
மௌனங்களில் மட்டுமே பேசினாள்.....
சரிதான்.....
தேவதைகள் ஏனோ சில நேரங்களில் வரமளிப்பதில்லை !!!!

````````````````````````````````````````````````````````

என்னைக் கண்டும் காணாதது போல்
செவ்வனே நடந்துக்கொண்டிருந்தது
அவள் கண்கள் நடத்திய
காதல் நாடகம்...

````````````````````````````````````````````````````````

கவிதைகளை எழுதி முடித்துவிட்டேன்,
ஆனாலும் அவள் பெயரை விட்டு
இடம்பெயர மறுக்கிறது
என் பேனா.....!!!

````````````````````````````````````````````````````````

என்ன விலை சொல்லிக் கேட்பேன் ?,
உலகமே மறந்து போகும்,
உன்னுடைய அந்த தெற்றுப்பல் சிரிப்பை !!!

````````````````````````````````````````````````````````

பெண்ணென்ற ஆணவத்தை
அவளிடம் கண்ட போதும்
கோபம் ஏதும் வரவில்லை,
இதயம் நிறைந்தது............
அவளைப் பார்த்து இளித்த இளைஞனுக்கு
அறை விழுந்தபோது................

````````````````````````````````````````````````````````

 ....என்னவளைத் தேடிப் போன என் இதயம்
தொலைந்துப் போனதாக கேள்வி !!!
தடங்கலுக்கு வருந்துகிறோம்
இப்படிக்கு,
இதய துடிப்புகள் !!! ♥ .. ஜெய் & ப்ராங்க்ளின் ...

````````````````````````````````````````````````````````

அவள் தொட்டுச்சென்ற இலைகளில் கூட,
மகிழ்ச்சியாய் அமர்ந்து தேன் தேடுகிறது,
வண்ணத்துப்பூச்சி !!! ஜெய் ♥

````````````````````````````````````````````````````````

அவள் தோளில் அமர்ந்து விட்ட மகிழ்ச்சியில்,
இன்னும் உயரே பறக்கத் துவங்கியது,
சிட்டுக்குருவி !!!

````````````````````````````````````````````````````````

 அவள் கைப்பட்ட நொடியில்
உயிர்பெற்றெழுந்தது,
வரம் வாங்கி வந்த மடிக்கணினி........

````````````````````````````````````````````````````````

இரண்டு நிமிடம் ... ஒரு நிமிடம் ...
என எனக்காக இருக்கும் மீதி நிமிடங்களை
எண்ணிக்கொண்டிருக்கிறாள்,
வெகு நேரமாகியும் குறையவில்லை ,
நிமிடங்களும், வலிகளும் !!!! ...ஜெய் ♥

````````````````````````````````````````````````````````

 வெகு நேரமாய் காத்திருந்தேன்,
அவள் வரவில்லை,
விழி நீரின் மழையால், பூத்தது ' வானவில் ' ..........

````````````````````````````````````````````````````````

நீ பார்க்க துவங்கியவுடனே,
பூக்க துவங்கிவிட்டன
இத்தனை நாளாய் உன்னைத் தேடிக்கொண்டிருந்த
என் கவிதைகள்...............

````````````````````````````````````````````````````````

அவள் என்னைவிட்டு நீங்கிய மறு நொடியிலிருந்து,
சில நிமிட துடிப்புகளை குறைத்துக்கொண்டது,
' இதயம் ' ......!!!

````````````````````````````````````````````````````````

ஏன் இன்னும் உன்னைக் காணவில்லை ??
என்ற கவலையிலேயே
நிமிடங்களை கடக்க
வேக வேகமாக முயற்சி செய்கிறது,
கடிகார முட்கள் .....

````````````````````````````````````````````````````````

அவளை விட்டு பிரிந்துவிடப்போகிறோம்
என்ற பயத்தினால்,
வேக வேகமாய் அவளைப் பின் தொடர்கிறது,
என்னவளின் நிழல் ..............!!!

````````````````````````````````````````````````````````

எவ்வளவுதான் காயம்பட்டாலும்,
உன் ' அச்சச்சோ ' வில் கரைந்துவிடுகிறது
என் எல்லா வலிகளும் !!!

````````````````````````````````````````````````````````

நீயின்றி எப்படி நான் தனித்திருப்பேன் ,
நாளை நீ வரும் வரை ??? ...ஜெய் ♥

````````````````````````````````````````````````````````

கனவிலும் நான் நினைக்கவில்லை,
இவ்வளவு எளிதாக
என் இதயத்தை நீ கொண்டுசெல்வாய் என்று !!!

````````````````````````````````````````````````````````

அடிக்கடி இருட்டுக்குள் சென்று விடுகிறாய்..........
எப்படியோ உன் நிழலில்
நான் ஒளிந்திருப்பதை கண்டுகொண்டு !!!

````````````````````````````````````````````````````````

நீ கோபப்பட துவங்கும்போதேல்லாம்,
வியர்க்கத் துவங்கிவிடுகிறது,
என் இதயம் ........

`````````````````````````````````````````````````````````

யாராவது கொண்டு வாருங்கள் ,
அன்று எனக்காக
மழையில் கரைந்த,
என்னவளின்
ஒரு துளிக் கண்ணீரை !!!

`````````````````````````````````````````````````````````

நாளை உன்னைக் காணப்போகும்
மகிழ்ச்சியில்,
இரவெல்லாம் இமை மூட மறந்தன
என் விழிகள் !!!

```````````````````````````````````````````````````````

உன் தீண்டல் வேண்டிக் காத்திருக்கின்றன, 

என் கவிதைகள்.........

~ ' கவிதை நிலா ' ஜெய் <3  ~

11 comments:

  1. Very nice varigal.:) Thanx 4 the reading pleasure.

    ReplyDelete
  2. Nice lines..Amazing...njoyed reading.. :)

    ReplyDelete
  3. **kanave ilai
    nan uranguvathum
    un ninaivilthan...
    vizhipathum
    un ninaivilthan

    ReplyDelete
  4. aiyo epdinga ivlo supera kavithai eluthuringa?!?

    "ALAGIL VASIKUM UYIRGAL
    PALA UNDU....AANAL..
    ALAGE VASIKUM UYIR..
    NE MATUMTHAN..." NALARUKUNGALA?UNGA ALAVUKU ILILA OTHUKURAN...

    ReplyDelete
  5. **UN OSAILA VARTHAIGALAI...
    UNARGIRATHU EN IDAYAM...**

    ReplyDelete
  6. **UN KANGAL ENA PUTHAGAMA?
    VAASIKA THODANGIYATHU EN IDALGAL...
    NESIKA THONDAIVITATHU...
    EN IDAYAM...**THIS IS ESPECIALLY FOR URயாராவது கொண்டு வாருங்கள் ,
    அன்று எனக்காக
    மழையில் கரைந்த,
    என்னவளின்
    ஒரு துளிக் கண்ணீரை !!!THIS VERSE...

    ReplyDelete
  7. **VAAIPU KIDAITHATHU
    UN KADHALARAI VAZHA...
    VARAM KIDAIKUMO UN KANAVARAI VAZHA....?!**IPDI SOLUNGA NANBARE...UNGA LUV SUCCESS AGUM...!KAVALAPADATHINGA NEENGA VIRUMPURA PONU UNGALUKUTHAN...!

    ReplyDelete
  8. **NANBARE... UNGAL ALAGANA KANGALUKU
    ARPANITHUVITEN...
    EN KAVITHAIGALAI....**

    ReplyDelete
  9. **MEIMARANTHUVITEN...
    EVARAIUM PUNPADUTHATHA UN PUNSIRIPIL...**

    ReplyDelete
  10. ITHULA ULA KAVITHAIGAL ELAM SUPERNGA SOLA VARTHAIGALE ILAI......KEEP IT UP...REALLY NALA KAVITHAI ELUTHURINGA....!AIYO CHANCELESS...NENGA MATUM CINEMAPAKAM PONINGANA...NALA EDIRKALAMNGA...VERA YARUKU..?!CINEMAKUTHAN....!

    ReplyDelete
  11. ....என்னவளைத் தேடிப் போன என் இதயம்
    தொலைந்துப் போனதாக கேள்வி !!!
    தடங்கலுக்கு வருந்துகிறோம்
    இப்படிக்கு,
    இதய துடிப்புகள் !!! this is marvellous...xcellentnga...ungal natpuku nan thaguthi endru neengal ninaithal..udane ungal keyboardilirunthu...cute_barathi@yahoo.com ku reply seithidavum...by sweetbarathi

    ReplyDelete