Wednesday, October 6, 2010




ஏன் பிறந்தேன் என்று
இது வரை எண்ணியிருந்தேன்,
பூங்கொத்துக்களுடன்
நீ சொன்ன
வாழ்த்துகளால்
அர்த்தம் பெற்றுக்கொண்டது
நான் பிறந்த நாள் . . .!!! 



நடு இரவினைக் கண்டும்
அஞ்சிடாது வந்து
வாழ்த்துகள் சொன்னாய்.
கவனிக்க மறந்து விட்டேன்.
பூங்கொத்துக்களின் மத்தியில் நின்று
என்னிடம் பேசிச் சென்றது
பூஞ்சோலையா,
பூக்களின் தேவதையா ???
 

 ~ தேவதையின் காதலன் ஜெய் ~

No comments:

Post a Comment