Monday, March 22, 2010

பிரிவிலும் .........


காலையில் எழுந்திருக்கும்போதே,
கவிதையோடுதான் கண்விழிப்பாயா ??
சலிப்போடு என் குடும்பமே கேட்கும் தருணமெல்லாம்
சிரிப்போடு சிந்திப்பேன்.....
தேவதைகளுக்கென படைக்கப்பட்டது
மனித இதயங்கள் உணராது........♥


பனி படர்ந்த இரவு,
கட்டியணைக்கும் குளிர்,
தட்டி எழுப்பும் உன் கனவு,
என் இதயத்தை தொட்டு விளையாடிய உன் சிரிப்பு
என உன் நினைவுகள் எனைத் தீண்டும் போது,
அடங்க மறுத்தது இரவு,
உருகி வழிந்துக்கொண்டிருந்தது என் காதல்..........


' நீ இந்த நொடி என்ன செய்து கொண்டிருப்பாய் ? '
என்று சிந்திப்பதிலேயே கடந்துவிடுகின்றன,
என் எல்லா நிமிடங்களும்................................♥

 வன்முறைகளுக்கு எதிராக குரல் குடுப்பாய்.....
அதெப்படி ?
என் இதயத்தின் மீது ஒட்டு மொத்த தாக்குதல்களை நிகழ்த்திவிட்டு
சலனமின்றி செல்கின்றன உன் விழிகள்......

நீ படிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டாலும்,
பூங்காக்கள்,
நடைபாதைகள்,
சாலை ஓரங்கள்
என...
எங்கும் காண்கிறேன்,
தாயகம் சேரா
என் கவிதைகளை....!!!



1 comment: