Monday, March 22, 2010

காத்திருந்த காதல்

உறங்கும்போது மறக்க நினைத்தாலும்,
என்னைச் சுற்றிலும்
மின்மினிப் பூச்சிகளாய் உன் நினைவுகள்.....


ஏனோ தெரியவில்லை பெண்ணே.....
உன்னை பற்றி எழுதினால், ஏன் ?,
' இந்த நொடி நீ என்ன செய்து கொண்டிருப்பாய் ' என்று சிந்தித்தால் கூட,
கோபம் பற்றிக்கொண்டு வருகிறது சிலருக்கு.
உலகமே பார்த்து பொறாமைப்படும் என்னவளுக்கு,
என் இனிய 'இரவு ' வணக்கம்... ( பெண்ணுக்கு பெண்ணே எதிரியா ??? )


உன் அன்பில் நான் மூச்சையர்ந்து கிடக்கின்றேன்,
சுவாசம் நிறைந்து, என் உயிர் தேடும், உன் நினைவுகள் ஊடுருவும் ஒவ்வொரு நிமிடமும்,
ஏதோ ஓர் இனம் புரியா உணர்வு.
இதயமும் சொன்னது.
ஆழ் மனம் கீறி,
உன் பெயர் தேடும் வர்ணஜால கனவுகள்,
உறக்கம் தட்டி எழுப்பும் என் தனிமை இரவுகள் ,
திரும்பவும் துளிர்க்கும் அதிகாலை ஏக்கங்கள்
என தொடர்ந்து கொண்டிருக்கிறது
நிலவைக் காட்டி நீ தொடங்கி வைத்த காதலும்.........


நீ வரும் வரை, விலாசமில்லா வீதிகளில்,
விடை தேடி அலைந்து கொண்டிருந்த என் கனவுகளை
கண்டெடுத்த தேவதைப் பெண்ணே...........................
வானும், மண்ணும் ஒழிந்து போயினும்,
அழியாது நம் காதல்.......


எங்கிருந்தோ வந்தாய்....
ஒரு நாள் தொடர்வண்டிப் பாதையில் சந்தித்துக் கொண்டோம்.... 
வார்த்தைகள் அமைதியாகி,
மௌனங்கள் பேசிக்கொள்ள, 
பின்னொரு நாளில் ஒன்றாய் கைகோர்த்து நடந்தோம். பாதைகள் பிரிந்தாலும், 
முடிவின்றி , 
கைகோர்த்து செல்கிறது நம் காதல்......!!!


ஒரு புகைப்படம் காட்டி கவிதை கேட்டாய்....... 
ஒரு நிமிடம் வார்த்தைகளற்று திகைத்து நின்றேன்... 
கவிதையாய் என்னவள் !!!


விடியும் வரை நீ காத்திருக்க சொன்னாலும், 
ஏனோ சற்றும் அயராமல், 
உன்னை நினைத்து ஆட்டம் போடுகிறது மனது.............


உறங்கும்போது மறக்க நினைத்தாலும்,
என்னைச் சுற்றிலும்
மின்மினிப் பூச்சிகளாய்
உன் நினைவுகள்.....

2 comments:

  1. **KATRUM KARUVARAITHAN...
    UN SWASAKATRAI SUMAPATHAL...**

    ReplyDelete
  2. **VARUDANGAL ELAM VARUNTHUGINRANA
    UNAI KADANTHUSELA VENDUME ENRU...**

    ReplyDelete