Sunday, March 7, 2010

இனிதே நடந்தது..... கருணைக் கொலை


மெல்லிதாய் திட்டியதற்கே நூறு முறை மன்னிப்புக்கேட்டாய்.....
பின்னாளில் இப்படி ஒரு ' பெரும் ' செயலை செய்யப்போகிறோம் என்று முன்னரே திட்டமிட்டாயா ??

வணக்கம், 
சற்றுநேரம் பொறுத்திருங்கள், 
என்னவள் வந்திருக்கிறாள்
 மீதமிருக்கும் உயிரை 
விலைக் கேட்டு போவதற்கு........

உனக்கு இதயம் இல்லை என்று
என்னுடையதையும் பறித்துக்கொண்டாய்
யாரிடமும் சொல்லவில்லை நான்,
என் இதயம் உன் வசம் இருந்தும்
உன்னை ஏன்
எல்லாரும் கூறுகிறார்கள்
நீ ' இதயமற்றவள் ' என்று......


என்னவள் செய்தி அனுப்பினாள் 
வார்த்தைக்கு வார்த்தை கேள்வி கேட்டது இதயம், 
சற்று நேரம் இதய துடிப்புகளை நிறுத்திக்கொள்ளட்டுமா ???

எத்தனையோ கூலிப்படைகள் நிகழ்த்த முடியாத காரியத்தை
 செவ்வனே செய்து முடித்தது, 
என் கதையைக் கேட்டு நீ விட்டுச்சென்ற இதழோர சிரிப்பு....!!!

எதற்கும் உன் தந்தையிடம்
கேட்டுப்பார்,
அவர் தான் ஊரிலேயே சிறந்த இதய மருத்துவராமே,
எப்படி நீ இதயமின்றி பிறந்தாய் என்று !!!

' என் email id ஐ delete பண்ணிடு ' ,
'  Mails எல்லாத்தையும் trash bin ல போட்டுவிடு ' , 
' தயவு செய்து இனி friendship Request அனுப்பாதே '
' CHAT ல இருந்து என்னை Ignore பண்ணிடு...............' 
- நீ போட்ட உத்தரவுகளை எல்லாம் சத்தமே இல்லாமல் ரசித்துக் கொண்டிருந்தது,
 நீ என்னை விட்டுப் பிரிய போகிறாய் என்பதைக் கூட கணிக்க முடியாத 
என் அப்பாவி மனது.........

No comments:

Post a Comment