Monday, March 8, 2010

தழுவல்.......

* என்னைக் காணும்போதெல்லாம் தலைக்குனிவாய்,
நாணம் என்று நினைத்தேன்......
இப்பொழுதான் புரிந்தது,
காதல் இல்லா உன் கண்களை
மறைக்க முயன்றாய் என்று.....

* நூறு கோடி நீர்க்குமிழிகளுடன் நான்,
ஒரே ஒரு ஊசியுடன் நீ.....!!!

* தூக்கத்தில் மூழ்கிய பின்பும்
கனவுகள் இல்லை
திறந்திருக்கும் விழிகளில்
ஆயிரம் கனவுகள்......!!!

* உறங்க மறுக்கிறேன்
இமைகளுக்கிடையே நீ....

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Good..
    தூக்கத்தில் மூழ்கிய பின்பும்
    கனவுகள் இல்லை
    திறந்திருக்கும் விழிகளில்
    ஆயிரம் கனவுகள்......!!!
    Many likes to the above

    ReplyDelete